குறிப்பிட்ட நபர் கடந்த 02 மாதங்களுக்கு முன்னர் வீட்டை விட்டுச் சென்றுள்ளார். வழக்கமாக சில நாட்கள் வெளியே சென்று திரும்பும் வழக்கமுடையவர் என்பதால் குடும்பத்தினர் ஆரம்பத்தில் சந்தேகிக்கவில்லை. எனினும் ஒரு வாரத்திற்கு மேலாகியும் வராததால் அவரது மனைவி கொக்காவெவ பொலிஸில் முறைப்பாடு செய்தார்.
கடந்த ஆகஸ்ட் மாதம் 27 ஆம் திகதி ஹபனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட காப்பகப் பகுதியில் நஞ்சருந்தி உயிரிழந்த நிலையில் நபர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டது. புத்தாண்டிற்கு மகன் வாங்கிக் கொடுத்த ஆடைகளுடன் அச்சடலத்தின் ஆடைகள் ஒத்துப்போனதால், அது தனது கணவர்தான் என மனைவி மற்றும் உறவினர்கள் தவறாக அடையாளப்படுத்தினர்.
அதன்பின்னர், ஆகஸ்ட் 31 ஆம் திகதி பொலன்னறுவையில் அச்சடலம் அடக்கம் செய்யப்பட்டது. கடந்த 06 மற்றும் 07 ஆம் திகதிகளில் அவருக்குரிய மதரீதியான தான சடங்குகளும் குடும்பத்தினரால் செய்து முடிக்கப்பட்டுள்ளன.
இவ்வாறான பின்னணியில், உயிருடன் இருக்கும் அந்த நபர் பேருந்தில் பயணம் செய்து திடீரெனத் தனது சகோதரியின் வீட்டை சென்றடைந்துள்ளார்.
அவர் உயிருடன் மீண்டு வந்துள்ளதைக் கண்டு அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர், உடனடியாக இது குறித்துக் கொக்காவெவ பொலிஸாருக்குத் தகவல் அளித்துள்ளனர். ஏற்கெனவே அடக்கம் செய்யப்பட்ட சடலம் யாருடையது என்பது குறித்தும், இந்தத் தவறுதலான அடையாளம் காண்பது குறித்தும் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.






.jpg)



.jpg)


.jpg)