2026 - புலமைப் பரிசில் பரீட்சையில் பெரியகல்லாறு மெதடிஸ்த மிஷன் தமிழ் பெண்கள் பாடசாலை சாதனை

 (சித்தா) 

மட்டக்களப்பு மாவட்டத்தின் பட்டிருப்பு கல்வி வலயத்திலுள்ள  பெரியகல்லாறு மெதடிஸ்த மிஷன் தமிழ் பெண்கள் பாடசாலையில் தற்பொழுது வெளிவந்துள்ள 2026க்குரிய புலமைப் பரிசில் பரீட்சையில் தோற்றிய 43 மாணவர்களில்  15 மாணவர்கள் வெட்டுப்புள்ளிகளுக்கு மேல்  பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளனர்.  

வெட்டுப்புள்ளிகளுக்கு மேல் பெற்ற மாணவர்கள்

உதயராசா கிறௌணித்,சிவராஜன் ஷெரோன்  யோசுவா , செந்தூரன் லஸ்வாமித்ரன் ,சிவநாதன் கியுமித்,மைக்கல் டேவிட் றேய்னா டிவைனி ,பார்த்தீபன் தேயுசிறிஷா,சசிகரன்  சியாழினி, றோசான்  கேறுத்,பிரகாஸ் விஹாஷினி,ரசிக்குமார்  ஜிதீஸ்,குமணவேள்  கிர்திக் ஷன்,ஜனோஜன் ஸஞ்சனா,பெனடிக் சத்தியசீலன்,குகதாசன் சயங்கனா,சுதேந்திரராஜ் சர்ஜனா,

இப்பாடசாலை தரம் 5  புலமைப்பரிசில் பரீட்சையில் தொடர்ந்து சாதித்து வருவதை காணக்கூடியதாகவுள்ளது.  அதிபர் பூ.கமலதாசன் அவர்களது வழிகாட்டுதல்  மற்றும் ஆலோசனைகளின் கீழ்  திருமதி.ரம்யா விஜயரூபன், திருமதி. நிதாஜினி சிவநாதன் ஆகிய ஆசிரியைகளின் அயராத தொடர் கல்வி நடவடிக்கைகளின் காரணமாகவும் இப்பாடசாலையின் ஏனைய ஆசிரியர் குழாமின் பேராதரவுடன் இந்த வெற்றியை மாணவர்கள் பெற்றுள்ளார்கள் என்பதை பாடசாலையின் அதிபர் தெரிவித்தார்.