பெசில் ராஜபக்‌ஷவுக்கு எதிராக ‘Blue Notice’ கோரிக்கை



முன்னாள் அமைச்சர் பெசில் ராஜபக்ஷவுக்கு எதிராக 'நீல அறிவித்தல்' (Blue Notice) ஒன்றை விடுக்குமாறு குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (CID) சர்வதேச பொலிஸாரிடம் (Interpol) கோரிக்கை விடுத்துள்ளது.

இலங்கை சுற்றுலா ஊக்குவிப்பு பணியகத்தின் நிதியைத் தவறாகப் பயன்படுத்தியமை தொடர்பான குற்றச்சாட்டு உட்பட 3 குற்றச்சாட்டுகளை அடிப்படையாகக் கொண்டே இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.