மட்டக்களப்பு கல்லடி கடற்கரையில் தந்தையர் தின நிகழ்வுகள்


(சிவம்)

தந்தையர் தினத்தையொட்டி சிறுவர்களினால் தந்தையர்களைக் கௌரவிக்கும் நிகழ்வு நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை மட்டக்களப்பு கல்லடிக் கடற்கரையில் இடம்பெற்றது.

தந்தையர் தினத்தையொட்டி  FUTURE MINDS KINDERGARTEN & CHILD CARE பாலர் பாடசாலைசிறுவர்கள்  தந்தையர்களுக்கு அன்பையும் ஆதரவையும் வழங்கும் பழக்கத்தை      ஏற்படுத்தும் நோக்கோடு மட்டக்களப்பு தாண்டவன்வெளியில் உள்ள விளையாட்டுக்களுடன் கூடிய சிறுவர் பாலர் பாடசாலையினால்; இந்நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டன.

பாலர் பாடசாலையின் முகாமைத்துவப் பணிப்பாளரும் அம்பாரை மாவட்டச் செயலகத்தின் காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் உதவிப் பணிப்பாளருமான வி. மனோகரன் தலைமையில் நிகழ்வுகள் இடம்பெற்றன.

இதில் தந்தையர்களைப் பற்றிய சிறுவர்களின் பேச்சுக்கள், நடனங்கள் மற்றும் சிறுவர்களினால் தந்தையர்களை  அன்பு செலுத்தும் வாசகங்கள் அடங்கிய ஞாபகார்த்த வாழ்த்து அட்டைகள் ஒவ்வோரு சிறுவர்களினாலும் தங்களது தந்தையர்களுக்கு வழங்கப்பட்டன.

தந்தையர்களுக்கான விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பாலர் பாடசாலையின் அதிபர் ஆர். சிறினிவாசன் பரிசுப் பொருட்கள் வழங்கிக் கௌரவித்தார்.