பின்தங்கிய பிரதேச மாணவர்களுக்கான புத்தகப் பைகள் அன்பளிப்பு

மட்டக்களப்பு முறக்கொட்டாஞ்சேனை பகுதியில் அமைந்துள்ள தேவபுரம் கிராமத்தைச் சேர்ந்த மக்கள், வறுமைக் கோட்டின் கீழ் வாழ்ந்து வருகின்றனர். மீன்பிடித்தலையே பிரதான ஜீவனோபாயத் தொழிலாகக் கொண்டது இக்கிராமம். தேவபுரம் கஜமுகன் வித்தியாலயத்தில், தரம் ஒன்றிலிருந்து ஐந்து வரை கல்வி பயிலும், இக்கிராமத்தைச் சேர்ந்த 100 மாணவர்களுக்கு, சைவ சமூகத் திருப்பணிக் கழகத்தால், கடந்த 05- 09- 2014 (வெள்ளிக் கிழமை) அன்று, 100 இலவச புத்தகப் பைகள் வழங்கி வைக்கப்பட்டது. இந்நிகழ்வில், கழகத்து உறுப்பினர்களே நேரடியாகப் பங்கெடுத்திருந்ததுடன், மாணவர்களை உற்சாகப்படுத்தும் விதமாக, சமயம்சார் நற்சிந்தனைகளும் நன்னெறிக் கதைகளும் அவர்களால் எடுத்துச் சொல்லப்பட்டமையும் குறிப்பிடத் தக்கது.