கிழக்கு பல்கலைக்கழத்தில் நடைபெற்ற இரத்த தான முகாம்

(சித்தாண்டி நித்தி) கிழக்கு பல்கலைக்கழகத்தில் இரத்த தான முகாமொன்று விஞ்ஞான பீட மாணவர்களின் தலைமையில் இன்று (28) செவ்வாக்கிழமை பல்கலைக்கழக நல்லையா மண்டபத்தில் நடைபெற்றது. 

மட்டக்களப்பு இரத்த வங்கி வைத்தியர்களான வைத்தியர் K.விவேக், வைத்தியர் யசிது மற்றும் வைத்தியசாலை தாதியர்கள் குழு வருகைதந்து கலந்துகொண்டிருந்தனர்.

நடைபெற்ற இரத்த தான முகாமில் பல்கலைக்கழக மாணவர்கள் தொடக்கம் கல்விசார் ஊழியர்கள் மற்றும் கல்விசாரா ஊழியர்கள் என 232 பேர் கலந்துகொண்டு தங்களின் பெறுமதியான இரத்தத்தை தானமாக வழங்கியிருந்தனர். நடைபெற்ற இரத்த தான நிகழ்வுக்கு உதவிகள் வழங்கியிருந்த அனுசரணையாளர்களை பின்வரும் படங்களில் காணலாம்.