மட்/வாழைச்சேனை இந்துக்கல்லூரியில் மாணவர் தலைவர்களுக்கான சின்னம் சூட்டும் நிகழ்வு

(ச.மோகிலன்)
கல்குடா கல்வி வலயத்திலுள்ள வாழைச்சேனை இந்துக்கல்லூரியில் மாணவர் தலைவர்களுக்கான சின்னம் சூட்டும் நிகழ்வு நேற்று  பிரதான ஒன்று கூடலின் போது  இடம்பெற்றது.

இதில் தரம் 13 கலை, வர்த்தக, விஞ்ஞான பிரிவில் மொத்தம் 18 மாணவர்கள், மாணவதலைவர்களாக தத்தமது பெற்றோர்களால் சின்னம் சூட்டி கெளரவிக்கப்பட்டதுடன்  பாடசாலை அதிபர், ஆசிரியர் , பெற்றோர், மாணவர்கள்  முன்னிலையில் சத்தியப்பரமாணம் எடுக்கப்பட்டது. இதில் மாணவ தலைவர்களாக தெரிவு செய்யப்பட்ட 18 மாணவர்களையும் அதிபர், பிரதி அதிபர், ஆசிரியர் , பெற்றோர், மாணவர்கள் தங்களது பாராட்டுக்களை தெரிவித்தனர்