சித்தாண்டியில் காணாமல் போன இளைஞர் சடலமாக மீட்பு!

கடந்த மூன்று நாட்களுக்கு முன்னர் காணாமல் போனதாக கூறப்படும் சித்தாண்டி ஈரளக்குளத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவரின் சடலம் சந்தனமடு ஆற்றுப்பகுதிக்கு அடுத்ததாகவுள்ள இடகாலி ஆற்றில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.


சித்தாண்டியைச் சேர்ந்த நல்லதம்பி விஜிகரன்(வயது20) என்ற இளைஞரின் சடலமே இன்று(26) பிற்பகல் சந்தனமடு ஆற்றுப்பகுதியில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.

சித்தாண்டியில் வசிக்கும் குறித்த இளைஞர் விவசாய நடவடிக்கைகளுக்காக தனது குடும்பத்தினருடன் ஈரளக்குளம் கிராமத்தில் தங்கியிருந்த நிலையிலேயே கடந்த மூன்று நாட்களுக்கு முன்னர் காணாமல் போயிருந்ததாகவும் இவரை காணாது பல இடங்களில் பெற்றோர் தேடியுள்ளனர்.

 இன்நிலையில் இன்று ஈரளக்குளம் வேரம் என்னுமிடத்தில் உள்ள இடகாலி ஆற்றுப்பகுதியில் சடலம் ஒன்று மிதப்பதாக தகவல் கிடைத்ததை அறிந்து அதை பார்வையிட்டபோது அது தனது மகன் என்பதை அடையாளம் கண்டுகொண்டதாக அவரது பெற்றோர் கருத்து தெரிவித்துள்ளனர்.

குறித்த சடலத்தை பொலீசார் பார்வையிட வராத காரணத்தினால் சடலம் பலுதடைந்த நிலையில் ஆற்று பகுதியிலேயே வைக்கப்பட்டுள்ளதாகவும் சடலத்தை பார்வையிடுவதற்கு பொலிசார் நாளைய தினம் வருவதாக அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

உயிரிழந்த  நல்லதம்பி விஜிகரன் என்பவர் சித்தாண்டி ஊடகவியளாலர் நல்லதம்பி நித்தியானந்தன்(சித்தாண்டி நித்தி) அவர்களின் தம்பி என்பது குறிப்பிடத்தக்கது.