குடும்பஸ்தர் ஒருவர் சடலமாக மீட்பு


அம்பாறை ஆலையடிவேம்பு பிரதேச செயலகப் பிரிவிலுள்ள மகாசத்தி கிராமத்திலுள்ள வீடொன்றிலிருந்து குடும்பஸ்தர் ஒருவர் சடலமாக செவ்வாய்க்கிழமை(10) காலை மீட்கப்பட்டதாக அக்கரைப்பற்று பொலிஸார் தெரிவித்தனர்.
 மகாசத்திபுரத்தைச் சேர்ந்த 2 பிள்ளைகளின் தந்தையான 30 வயதுடைய தங்கவேலு இராஜேந்திரா என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சடலம் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.