காத்தான்குடியில் சடலம் மீட்பு

மட்டக்களப்பு - காத்தான்குடி , கீச்சான்பள்ளம் பகுதியில் இன்று காலை சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பொலிஸாருக்கு கிடைத்த தகவலை அடுத்தே  பொலிஸார் குறித்த சடலத்தை மீட்டுள்ளனர்.
சம்பவத்தில் 44 வயதுடைய ஆண் ஒருவரின் சடலமே மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.