மகிழவட்டுவான் சனசமூக நிலைய திறப்பு விழா

(வரதன்)
மண்முனை மேற்குப் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பின்தங்கிய பிரதேசமான மகிழவட்டுவானில் முதல்த்தடவையாக யூ.என் ஹபிடாட் நிறுவனத்தினால் ஜப்பானிய நிதியுதவியுடன்(30இலட்சம் ரூபா செலவில்)புதிதாக அமைக்கப்பட்ட சனசமூசக நிலையம் இன்றுமாலை  மக்களின் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டது


இந்நிகழ்விற்குப் பிரதம அதிதியாக மட்டு மாவட்ட மேலதிக அரச அதிபர் சீனித்தம்பி கிரிதரன் கலந்துகொண்டு திறந்து வைத்தார்
 .
 மண்முனை மேற்குப் பிரதேச செயலக பிரதேச செயலாளர் எஸ் சுதாகரன் மற்றும் யூ.என் ஹபிடாட் நிறுவனத்தின் உயர் அதிகாரிகள் பிரதேச செயலக ஊழியர்கள் மகிழவட்டுவான் கிராம அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்ட இவ்நிகழ்வில்
 சனசமூக நிலைய திறப்பு விழா  நினைவாக பிரதம அதிதியால் மரநடுகை நிகழ்வும் இடம்பெற்றதுன் கட்டிட உரிமைப் பத்திரமும்  கிராம அபிவிருத்திச் சங்க  தலைவரிடம் வழங்கி வைக்கப்பட்டது.