டெங்கு நோய் காரணமாக கர்ப்பிணி பெண் மரணம்!


திருகோணமலை, கிண்ணியா பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட கிண்ணியா-3, மாஞ்சோலை பிரதேசத்தில் டெங்கு நோய் காரணமாக கர்ப்பிணித் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக கிண்ணியா பொலிஸார் தெரிவித்தனர்.

22 வயதான 8 மாத கர்ப்பிணித் பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வயிற்றில் உள்ள சிசு இறந்ததை தொடர்ந்து கிண்ணியா தள வைத்தியசாலையில் இருந்து திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு மாற்றிய நிலையில் இம் மரணம் நிகழ்ந்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

இறந்த பெண் மற்றும் 8 மாத சிசுவின் நல்லடக்கம் இன்று கிண்ணியாவில் இடம்பெற்றது.