ஊரடங்கு தளர்வு நேரம் 12 மணியில் இருந்து 2 மணிவரை நீடிப்பு

கம்பஹா, கொழும்பு, புத்தளம் தவிர்ந்த ஏனைய மாவட்டங்களில் இன்று காலை 6 மணிக்கு நீக்கப்பட்ட பொலிஸ் ஊரடங்கு சட்டம் மீண்டும் இன்று மதியம் 2 மணிக்கு அமுலாக்கப்படும் எனவும் அது மீண்டும் மார்ச் மாதம் 30 ஆம் திகதி காலை 6 மணிக்கு நீக்கப்பட்டு அன்றைய தினமே மதியம் 2 மணிக்கு மீண்டும் அமுலாக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுலில் உள்ள காலப்பகுதியில் மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் தங்களது வீடுகளில் இருந்தவாரே கொள்வனவு செய்ய முடியும் எனவும் தட்டுப்பாடின்றி பொருட்களை வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.