ஊரடங்கு சட்டத்தை மீறி செயற்பட்ட 20 பேர் கைது !

இன்று மாலை 6 மணி முதல் எதிர்வரும் திங்கட்கிழமை மாலை 06 மணி வரை பொலிஸ் ஊரடங்கு அமுல் படுத்தப்பட்டுள்ளது

இந் நிலையில் கொச்சிக்கடை மற்றும் புத்தளம் கடற்கரைக்கு உட்பட்ட பகுதிகளில் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுலில் இருந்த வேளையில் கடலிற்கு சென்ற 20 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடற்படையினரால் குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொரோனா வைரசை ஒழிக்க அரசாங்கம் பல்வேறுபட்ட செயற்பாடுகளை முன்னெடுத்துவருகின்றது அதற்கு நாட்டு மக்களின் ஒத்துளைப்பு மிக அவசியமாக இருக்கிற்தாகவும் அனைத்து மக்களும் இதற்கு ஒத்துளைப்பு வழங்கும்படியும் அரசாங்கம் மக்களிடம் கேட்டுக் கொள்கின்றது