ஆரையம்பதியில் இரு பெண்களின் சங்கிலியை கொள்ளையிட முயன்ற இளைஞன் கைது


ஆரையம்பதியில், வீதியால் நடந்து சென்ற இரு பெண்களின் சங்கிலியைக் கொள்ளையிட முயன்ற இளைஞனை, இன்று (28) கைதுசெய்துள்ளதாக, காத்தான்குடி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி துமிந்த நயணசிறி தெரிவித்தார்.

கைதுசெய்யப்பட்ட இளைஞனிடமிருந்து சம்பவத்துக்குப் பயன்படுத்திய மோட்டார் சைக்கிளைக் கைப்பற்றியுள்ளதாகவும், பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

சில தினங்களின் முன்னர், ஆரையம்பதி காளியம்மன் கோயில் வீதியால் மேற்படி இரு பெண்கள் நடந்து செல்கையில், மோட்டார் சைக்கிளில் வந்த இளைஞர், பெண்ணின் கழுத்திலிருந்த சங்கிலியைக் கொள்ளையிட முயன்றுள்ளார்.

இது தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டுக்கமைய, சி.சி.டி.வி கமெராவின் உதவியுடன் மேற்படி இளைஞனை, நேற்றுக் கைதுசெய்துள்ள காத்தான்குடி பொலிஸார், சந்தேகநபரை நீதிமன்றித்தில் ஆஜர்படுத்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.