நீரில் மூழ்கி சகோதரர்களான இரு சிறுவர்கள் உயிரிழந்துள்ளனர்


யாழ்ப்பாணம் – மண்டைதீவில் நீரில் மூழ்கி சிறுவர்கள் இருவர் உயிரிழந்துள்ளனர் என்று ஊர்காவற்றுறை பொலிஸார் தெரிவித்தனர்.

இந்தச் சோகச் சம்பவம் இன்று (21) மாலை இடம்பெற்றுள்ளது.

இதில் மண்டைதீவைச் சேர்ந்த சகோதரர்களான சாவிதன் (வயது-7) சார்வின் (வயது-5) ஆகிய இருவருமே வயல் கேணியில் தவறி வீழ்ந்து உயிரிழந்தனர் என்று யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அறிக்கையிடப்பட்டுள்ளது.

சடலங்கள் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை சவச்சாலையில் வைக்கப்பட்டுள்ளன.

சம்பவம் தொடர்பில் ஊர்காவற்றுறை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்