ராகமை மருத்துவ பீட வளாகத்திலுள்ள மாணவர் விடுதியின் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இந்த தாக்குதல் இன்று (02) காலை நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
வெளியிலிருந்து வருகைத் தந்த நபர்களினாலேயே இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
தாக்குதலில் நான்கு மாணவர்கள் காயமடைந்துள்ளதாக பொலிஸார் கூறுகின்றனர்.
சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.