(உ.ஜெஷோமிக்கா & சஜான்
கிரான் பிரதேச செயலக பிரிவிற்கு உட்பட்ட அக்குறானை பாரதி வித்தியாலய கட்டிட திறப்பு விழா மற்றும் வித்தியாலயத்தின் முதலாவது இல்ல மெய்வல்லுனர் விளையாட்டு விழாவும் பாடசாலை அதிபர் சி.சிவனேசராஜா தலைமையில் அண்மையில் இடம்பெற்றது.
அக்குறானை பிரதேச மாணவர்கள் மிக நீண்ட தூரம் பயணித்து கல்வி கற்க முடியாத நிலையிலையே 1999ம் ஆண்டு தொடக்கம் அக்கிராம மக்களால் பல்வேறுபட்ட தரப்பினரிடமும் கோரிக்கை விடுக்கப்பட்ட போதிலும் புதிய பாடசாலை திறப்பதற்கான அனுமதி கிடைக்கப்பெற்றிருக்கவில்லை. பின்னர் முன்னாள் முதலமைச்சரின் முயற்சியின் பலனாக 2011ம் வருடம் இதற்கான அனுமதி கிடைக்கப்பெற்று பாடசாலை ஆரம்பிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
இவ்விரு நிகழ்விற்கும் பிரதம அதிதியாக முன்னாள் முதலமைச்சரும், ஜனாதிபதியின் ஆலோசகருமாக சி.சந்திரகாந்தன் கலந்துகொண்டதுடன் , கௌரவ அதிதிகளாக கல்குடா வலயக் கல்விப் பணிப்பாளர் ஸ்ரீ கிருஸ்ணராஜா, பிரதி கல்வி பணிப்பாளர் திருமதி.குலேந்திரராஜா, முன்னாள் மாகாணசபை உறுப்பினர் பூ.பிரசாந்தன், கோட்டக் கல்வி பணிப்பாளர், ஆசிரியர்கள், மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து சிறப்பித்தனர்.