பழுகாமம் கண்டுமணி மகா வித்தியாலயத்தில் இடம்பெற்ற சிறுவர் தின நிகழ்வு

(பழுவூரான்) பழுகாமம் கண்டுமணி மகா வித்தியாலயத்தில் சர்வதேச சிறுவர் தினமானது  01.10.2015ஆம் திகதி பாடசாலையில் இடம்பெற்றது. 

இதன்போது  மாணவர்களுக்கு ஆசிரியர்களால் இனிப்பு வழங்கப்பட்டதுடன் சிறுவர்  அவர்களின் உரிமை மற்றும் துஷ்பிரயோகங்கள் பற்றியும் விழிப்புணர்வூட்டப்பட்டது. 

அத்துடன் பாடசாலை மாணர்களால்  கழிவுக்கடதாசிகளில் மாத்திரைகள் பொதியிடும் 2000 பைக்கற்றுக்கள்  செய்யப்பட்டு பழுகாமம் மத்திய மருந்தக வைத்தியசாலை பொறுப்பதிகாரியிடம் கையளிக்கப்பட்டது.