
இந்நிகழ்வில் உதவி பிரதேச செயலாளர், உதவி திட்டமிடல் பணிப்பாளர், பிரதேச செயலகத்தின் உத்தியோகத்தர்கள், கிராம சேவை உத்தியோகத்தர்கள், திவிநெகும அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், பிரதேச சபையின் ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
ஆரம்ப நிகழ்வாக 'ஆரோக்கியமான சமுத்திரம் ஆரோக்கியமான கோள்' என்பது குறித்தும், சமுத்திரம் எனும் அளப்பரிய வளத்தின் அவசியத்தன்மை குறித்தும், தற்காலத்தில் அதன் உண்மை நிலை மாற்றமடைந்து செல்வதற்கு ஏதுவான காரணங்கள் குறித்தும் சுருக்கமான தெளிவுரை உதவி பிரதேச செயலாளரால் வழங்கப்பட்டது.
பின்னர் கடற்கரைப்பகுதியில் காணப்பட்ட பிளாத்திக், கண்ணாடி, இறப்பர் மற்றும் உக்கலடையாத பொருட்கள் சிரமதான நடவடிக்கை மூலம் பிரதேச சபையின் வாகன உதவியுடன் அப்பகுதியில் இருந்து அகற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.