
இவ்வெற்றியானது எமது பாடசாலைக்கும் கல்குடா கல்வி வலயத்திற்கும் பெருமை சேர்த்துள்ளது. இந்நிலையை அடைய பயிற்றுவித்த எமது வித்தியாலய உடற்கல்வி ஆசிரியர் செ.வேணுகோபாலராஜ் அதிபர் தா.சண்முகதாஸ் வெற்றி பெற்ற வீராங்கணைகளுக்கும் எமது பாடசாலை சமூகம் சார்பாக மனம்மார்ந்த நன்றிகளையும், வாழ்த்துக்களையும் பாடசாலை சமுகத்தினர் தெரிவித்துள்ளனர்.
மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திலுள்ள கித்தூள் ஶ்ரீ கிருஸ்ணா வித்தியாலயத்திற்கும் முறக்கொட்டான்சேனை இராமகிருஷ்ணா வித்தியாலயத்திற்குமிடையே கடந்த திகதி 23ஆம் திகதி நிந்தவூர் பொது மைதானத்தில் இடம்பெற்ற இப் போட்டியில் இராமகிருஷ்ணா வித்தியாலயம் மகாண மட்டத்தில் வெற்றி பெற்றுக்கொண்டது.