ஆயினும், இந்த ரூபா 5500 எவ்வாறு உருப்பெற்றது? என்னென்ன உணவுகள், உணவுகளின் அளவு மற்றும் உணவல்லாத அடிப்படை தேவைகள் கணிப்பீட்டுக்காக எவை கருத்திற்கொள்ளப்பட்டன. மேலும் அவை எவ்வாறு விலையிடப்பட்டிருக்கின்றன? அவ்வாறானவை முன்னுரிமைகள் மற்றும் விலை மாற்றங்களுக்கேற்பவும், உணவு மற்றும் உணவல்லாத கூறுகள் குறிப்பாக அடிப்படை சேவைகள், நாட்டில் விடுக்கப்படும் பிரதான சவால்கள் என்பவற்றிற்கிணங்க யதார்த்தமானது மற்றும் உணர்திறன் கொண்டது என்பதனை உறுதி செய்கிறது
அடிப்படையில் பிரச்சினையானது வறியோரின் உண்மையான தேவைகளை விட நடப்பில் உள்ள நுகர்வு மட்டங்களில் தங்கியுள்ளது. உதாரணமாக, ஐந்து பேர் கொண்ட குறைந்த வருமானம் பெறும் ஒரு நகர்ப்புற குடும்பமானது போதுமான சுகாதார வசதி, சுத்தம் மற்றும் பாதுகாப்பற்றதுமான ஒரு அல்லது இரு அறைகளின் வாடகைக்கு பணத்தை செலவிடுகின்றனர். செலவழிக்கும் இப்பணமானது அவர்களின் உண்மையான வசிப்பிடத்தேவையை பூர்த்தி செய்கின்றதா என்பதற்கான எந்த அடையாளமும் இல்லை.
நியாயமான உயர் வளர்ச்சி வீதங்கள் மற்றும் அதிகரிக்கும் தலா வருமானம் உண்மையில் பெரும் எண்ணிக்கையிலான வறியவர்கள் அல்லது வறுமையினால் பீடிக்கப்படக் கூடியவர்கள் தொகையை மறைக்க முனைகின்றது. நல்லதொரு வாழ்வூதியம் குறிப்பாக தேசிய மட்டத்தில் குறைந்த பட்ச ஊதியம் மாதாந்தம் ரூபா 10,000 மாக நிர்ணயிக்க திட்டம் என்பதற்கிணங்க யார் வறியோர் என்ற கேள்வியானது முக்கியமானது. இருப்பினும், வறுமையை பணரீதியான அல்லது முழுமையான அளவீடுகளுக்கு மட்டுப்படுத்துவது போதுமானதல்ல, அது தவறாக இட்டுச் செல்லப்படலாம். உதாரணமாக, தரவுகளின் படி அண்மைய ஆண்டுகளில் தோட்டத்துறையில் வருமான வறுமை கணிசமான அளவில் குறைந்துள்ளதாக காட்டப்படுகின்றது. ஆனால் இன்னும் பெரும்பாலான அம்மக்கள் கல்வி, குடிநீர், சுகாதார வசதிகள், மற்றும் போதிய வசிப்பிட வசதிகளை பெற்றுக்கொள்ளும் அடிப்படையில் கணிசமான அளவில் பின்தங்கிய நிலையிலேயே உள்ளனர்.
எனவே, பல்பரிமாண மற்றும் சார்பளவிலான வறுமை பற்றிய அளவீடுகள் வறுமையை புரிந்துகொள்வது மிக முக்கியமாகவுள்ளது. பொது சேவைகளின் விரிவாக்கம் மூலம் சுகாதாரம், கல்வி, குடிநீர் மற்றும் சுகாதார மற்றும் பொது போக்குவரத்து போன்ற சேவைகள் கிடைக்கப் பெறுவதை உறுதிப்படுத்தல் இன்றியமையாததாக உள்ளது.
ஆனால், இலங்கை வெறும் கவர்ச்சிகரமான பதிவுகளை இவை தொடர்பில் கொண்டிருப்பினும் இச்சேவைகள் எப்பொழுதும் எல்லோராலும் சமமாக பெற்றுக்கொள்ள முடியாதுள்ளது. இது எப்போதும் முழுமையாக இலவசம் என்றில்லை பல்வேறுபட்ட மறைமுகமான செலவுகள் அங்கு மறைந்துள்ளன. நம்பகரமான தரவுகள் வறுமை மதிப்பீட்டிற்கு மையமாக அமையும். அதாவது ஒரு குறிப்பிட்ட கால பல்வகைத் தரவு கருத்திற்கொள்ளப்படுகின்றது உதாரணமாக ஒரே குடும்பங்களை நோக்கி பல ஆண்டுகளாக பல விஜயங்கள் மேற்கொண்டு செய்யப்படும் நீண்ட கால ஆய்வுகள் உள்ளன. இது நாட்பட்ட மற்றும் நிலையற்றதுமான வறுமை நிலையினை அறிந்து கொள்வதற்கு அவசியமாகும். மேலும் இது வறுமை ஒழிப்பு உத்திகளை மேம்படுத்தவும் செய்கிறது.
வறுமைக் கோடானது பணரீதியான அளவீடாக வெறும் எண்களை விட உயர்வாக உள்ளது. அது, முக்கியமான விளைவுகளை உண்டாக்கும் ஒரு நுழைவாயிலாக திகழ்கின்றது. குறிப்பாக சமூக பாதுகாப்புக்கு நிகரான திட்டங்களின் ஒரு தகுதியை தீர்மானிக்க பயன்படுத்தப்படுகிறது. எல்லா விலக்கல்களுக்கும் மேலாக வறியவராக மாறக்கூடியவர்கள் அவர்களது உதவித்தொகைகளை பெற்றுக்கொள்வதில் நிறுத்தப்பட்டவர்களாக இருப்பது மிக முக்கியமான விடயமாகும்.
வறுமை மற்றும் சமத்துவமின்மையை அளவிடும் கேள்விகளை துறைசார் நிபுணர்களிடம் விட்டுவிடுவது மிகவும் நன்றாகும். ஏனெனில் இது ஒரு ஆரோக்கியமான பொது விவாதத்திற்கு உத்தரவாதம் அளிக்கின்றது. இதன் பங்குகள் மிக அதிகம் அத்துடன் சமூக நலன்புரி முறைமை மறுசீரமைப்பு - அதாவது சமுர்த்தி மற்றும் இதர விடயங்கள் தொடர்பில் தொடரும் கலந்துரையாடல்கள் இந்த கேள்விக்கு மேலும் வலுச்சேர்க்கின்றமை குறிப்பிடத்தக்கது.
வறுமையினை பற்றி சிந்திக்கும் போது மரியாதை, கண்ணியம் தொடர்பான கேள்விகளுக்கு ற்படும் அநீதி, நல்வாழ்வு, அடிப்படை உரித்துக்களை, உரிமைகளை அணுகக்கூடிய நிலை, தொழில்வாய்ப்பு மற்றும் வாழ்வூதியம் தொடர்பிலான கேள்விகளை பரிசீலித்து நிற்கின்றது. வறுமை எவ்வாறு பற்பல கசப்பான அனுபவங்களை பாலின சர்ச்சைகள், சாதி, வர்க்கம், இனம், இடம், வயது, இயலுமை அல்லது பேரழிவுகளின் மோதல்களின், யுத்தத்தின் விளைவாக தோற்றுவித்தது என்பவை பற்றியும் சிந்திப்பதாக உள்ளது.
வறுமையினை சமாளித்தலின் வறுமையுடன் போராடுதலின் முதல் படியாக பிரச்சினையின் ஆழ அகலம் தொடர்பில் கூடிய கவனம் செலுத்தல் வேண்டும். இதன் விளைவாக வறுமைக் கோட்டின் மீதான உத்தேச மாற்றம் முக்கியமானதும் வரவேற்கத்தக்கதுமாகும். இன்றைய தேவையானது உறுதியான அபிவிருத்தியை நோக்கி செயற்படுதல் மற்றும் வறுமைக்கான மூல காரணங்கள், வறுமையை புரிந்து கொள்வதிலுள்ள சிக்கல் மிக்க தன்மை போன்றவற்றை அறிந்து கொள்ளல், அத்துடன் அதன் பாதிப்புக்கள் மற்றும் அவற்றுக்கு பதிலளிக்க பொருத்தமான திட்டங்களை வடிவமைத்தல் என்பவற்றை வேண்டி நிற்கின்றது. இதன் முக்கிய அங்கமாக பல்வேறு மட்ட அரச முகவர்கள், சுயாதீன நிபுணர்கள், கல்வியாளர்கள் மற்றும் ஆய்வாளர்கள், ஆலோசனைக்குழுக்கள், மிக முக்கியமாக வறுமையின் கீழ் வாழும் மக்கள் பிரிவினர்களுக்குமிடையே மிக நெருங்கிய பங்காண்மைத் தொடர்பை பேணுதல் இன்றியமையாதது.
வறுமை ஆராய்ச்சி நிலையம் (CEPA)











.jpg)

