
காலை 8.45 மணியளவில் மாவட்ட செயலக சித்திவிநாயகர் ஆலயத்தில் பூஜைகள் நடைபெற்று நிகழ்வு ஆரம்பமானது.
தேசியக் கொடி ஏற்றப்பட்டு, தேசய கீதம் இசைக்கப்பட்டு, தமிழ் மொழி வாழ்த்து இசைக்கப்பட்டு, நாட்டுக்காக உயிர் நீத்த போர் வீரர்களுக்காக இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டதையடுத்து அரசாங்க உத்தியோகத்தர்கள் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டனர்.
சத்தியப்பிரமாணத்தினை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்சினி சிறிகாந்த் வாசிக்க உத்தியோகத்தர்கள் சத்தியப்பிரமாணம் செய்தனர்.
இதனையடுத்து மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் மாணிக்கம் உதயகுமார் புது வருட உரையாற்றினார்.
இதன்போது, உதவி மாவட்டச் செயலாளர் ஏ.நவேஸ்வரன், மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் ஆர்.நெடுஞ்செழியன், பிரதம கணக்காளர் எஸ்.நேசராஜா, திணைக்களத் தலைவர்கள், பதவி நிலை உத்தியோகத்தர்கள் மற்றும் உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.