ஆலையடிவேம்பு பிரதேச
செயலகத்தின் இவ்வருடத்திற்கான மாபெரும் சித்திரைப் புதுவருட விளையாட்டுப்போட்டிகள்
இன்று (27) காலை 6.00 மணிக்கு முதலாவது போட்டியான மரதன் ஓட்டத்துடன் ஆரம்பமாயின.
சாகாம வீதியின்
பிரதேச செயலக முன்றலிலிருந்து ஆரம்பமான இப்போட்டி நிகழ்வை ஆலையடிவேம்பு பிரதேச
செயலாளரும், சித்திரைப் புதுவருட விளையாட்டுப் போட்டிக்குழுவின் தலைவருமான
வி.ஜெகதீஸன் கொடியசைத்துத் தொடங்கிவைத்தார்.
இம் மரதன்
ஓட்டப்போட்டியானது பிரதேச செயலக முன்றலில் ஆரம்பித்து ஆலையடிவேம்பு வீதி வழியாக
ஸ்ரீ இராம கிருஷ்ணா கல்லூரி வீதியில் திரும்பி அம்பாறை வீதிக்குச் சென்று அதனூடாக அக்கரைப்பற்று
மணிக்கூட்டுக் கோபுரம்வரை சென்று திரும்பி, பொத்துவில் வீதி வழியாகத் தம்பட்டை முருகன்
கோவில்வரை சென்று, பின்னர் மீண்டும் அங்கிருந்து திரும்பி பொத்துவில் வீதி வழியாக
அக்கரைப்பற்று இராணுவ முகாமைக் கடந்து பழைய ஆஸ்பத்திரி வீதியூடாகத் திரும்பி சாகாம வீதியை
அடைந்து, அங்கிருந்து பனங்காடு தில்லையாற்றுப் பாலம் கடந்து பிள்ளையாரடிச்
சந்தியிலுள்ள ஆலையடிவேம்பு தெற்கு, சமுர்த்தி வங்கிக்கு முன்னால் நிறைவடைந்தது. கடந்த
வருடங்களைப் போலவே இப்போட்டியிலும் பங்குபற்றிய பனங்காட்டைச் சேர்ந்த வைரமுத்து
சத்தியசீலன் என்ற மரதன் ஓட்ட வீரர் முதலாமிடத்தைப் பெற்றதுடன் உதயகுமார் ரமேஷ்
இரண்டாமிடத்தையும், விஜயகுமார் விதுர்சன் மூன்றாமிடத்தையும் பெற்றுக்கொண்டனர்.
--------------------------------------
சைக்கிளோட்டம் இன்று (27) காலை 7.00 மணிக்கு இடம்பெற்றது.
முதலாவது போட்டியான மரதன் ஓட்டத்தைத் தொடர்ந்து சாகாம வீதியின் பிரதேச செயலக முன்றலிலிருந்து ஆரம்பமான இப்போட்டி நிகழ்வை ஆலையடிவேம்பு பிரதேச செயலாளரும், சித்திரைப் புதுவருட விளையாட்டுப் போட்டிக் குழுவின் தலைவருமான வி.ஜெகதீஸன் கொடியசைத்துத் தொடங்கிவைத்தார்.
குறித்த சைகிளோட்டப் போட்டியானது சாகாம வீதி வழியாக பனங்காடு தில்லையாற்றுப் பாலம், சிப்பித்திடல் மயானம், புட்டம்பைச் சந்தி, நீத்தையாற்றுப் பாலம், கூளாவடிச் சந்தி, சாகாமம் இராணுவ முகாம் என்பனவற்றைக் கடந்து காஞ்சிரங்குடா சந்தியை அடைந்து, பின் அக்கரைப்பற்று நோக்கிய பொத்துவில் வீதி வழியாக விநாயகபுரம் பஸ் தரிப்பிடம், திருக்கோவில் மணிக்கூட்டுக் கோபுரம், தம்பிலுவில் களுதாவளைப் பிள்ளையார் கோவில், தம்பட்டை முருகன் கோவில், அக்கரைப்பற்று இராணுவ முகாம் ஆகியவற்றைக் கடந்து அக்கரைப்பற்று மணிக்கூட்டுக் கோபுரம் சென்று வலது புறமாகக் கல்முனை வீதிக்குத் திரும்பி, அட்டாளைச்சேனை, ஒலுவில், நிந்தவூர் கடந்து காரைதீவு விபுலானந்தர் சுற்றுவட்டம் வரை சென்று, மீண்டும் திரும்பி அக்கரைப்பற்று நோக்கி வந்து சாகாம வீதியை எட்டி ஆலையடிவேம்பு பிரதேச செயலக முன்றலை வந்தடைந்து நிறைவுற்றது. இப்போட்டியில் பங்குபற்றிய ஜெயஸ்ரீசாமி ஜெயதாசன் என்ற வீரர் முதலாமிடத்தையும், அடின் அவுஸ்கோண் என்ற வீரர் இரண்டாமிடத்தையும், டனிஸ்டன் அவுஸ்கோண் என்ற வீரர் மூன்றாமிடத்தையும் பெற்றனர்.
இப்போட்டியில்
வெற்றிபெற்ற வீரர்களுக்கான பரிசுகள் மற்றும் பங்குபற்றிய வீரர்களுக்கான ஆறுதல்
பரிசுகள் என்பன இன்று (27) பிற்பகல் 2.30 மணி முதல் அக்கரைப்பற்று, தருமசங்கரி விளையாட்டு
மைதானத்தில் இடம்பெறவுள்ள ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தின் இவ்வருடத்திற்கான
சித்திரைப் புதுவருட விளையாட்டுப்போட்டிகளின் முடிவில் இடம்பெறவுள்ள பரிசளிப்பு
வைபவத்தில் அதிதிகளால் வழங்கிவைக்கப்படவுள்ளன.
இப்போட்டியில்
வெற்றிபெற்ற வீரர்களுக்கான பரிசுகளும் பங்குபற்றிய வீரர்களுக்கான ஆறுதல்
பரிசுகளும் இன்று (27) பிற்பகல் 2.30 மணி முதல் அக்கரைப்பற்று, தருமசங்கரி விளையாட்டு
மைதானத்தில் நடாத்தப்படும் ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தின் இவ்வருடத்திற்கான
சித்திரைப் புதுவருட விளையாட்டுப்போட்டிகளின் முடிவில் இடம்பெறவுள்ள பரிசளிப்பு
வைபவத்தில் அதிதிகளால் வழங்கிவைக்கப்படவுள்ளன.