பஸ் விபத்து ! ஒருவர் பலி ! 43 பேர் வைத்தியசாலையில் அனுமதி

சுற்றுலா சென்ற பஸ்வண்டி பஹல கடுகண்ணாவையில் விபத்து பலர் காயம்

அட்டாளைச்சேனை கல்வியியல் கல்லூரியில் இருந்து புறப்பட்ட பஸ்களில் ஒன்று பகலகடுகண்ணாவை பிரதேசத்தில் விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த விபத்து நேற்றிரவு   10 மணியளவில் ஏற்பட்டுள்ளது.

சுற்றுலா சென்ற 4 பஸ்களில் ஒன்றே முந்திசசெல்ல முற்படும் போதே சரிந்து இவ்வாறு விபத்துக்குள்ளாகியது.

சம்பவத்தில் பலியானவர் 32 வயதான அக்கரைப்பற்று பகுதியை சேர்ந்தவர் என காவற்துறை தெரிவித்துள்ளது. 

குறித்த பஸ்வண்டியில் 54 ஆசிரியர் பயிற்சி கலாசாலையை சேர்ந்த பயிற்சி ஆசிரியர்கள் குழாம் பயணித்ததாகவும் விபத்துக்குள்ளாகிய ஆசிரியர்கள் மாவனெல்லை மற்றும் பேராதெனிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகின்னது.

விபத்து குறித்து மாவனெல்ல போலீசார் மேலதிக விசாரனைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகளை உடனுக்குடன் WhatsApp இல்  தெரிந்துகொள்ள 
  0771660248 இந்த இலக்கத்தை உங்கள் தொலைபேசியில் Battinews என Save பண்ணுங்கள் 
 உங்கள் WhatsApp இருந்து JOIN என மேலே குறிப்பிட்ட எமது இலக்கத்துக்கு ஒரு மெசேஜ் அனுப்புங்கள்