பாடசாலை மாணவிகளுக்கு இலவச சானிட்டரி நாப்கின் வழங்கும் திட்டத்துக்கு அமைச்சரவை அனுமதி !



தெரிவு செய்யப்பட்ட பாடசாலைகளை சேர்ந்த மாணவிகளுக்கு சானிட்டரி நாப்கின் வழங்கும் திட்டத்துக்கு அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.

வறுமைக் கோட்டுக்கு உட்பட்ட பாடசாலைகளில் கல்வி பயிலும் 800,000 மாணவிகளுக்கு இவ்வாறு இலவச சானிட்டரி நாப்கின் வழங்கப்படவுள்ளது.

ஏப்ரல் மாதம் முதல் இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்த கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த பிரேரணை முன்வைத்திருந்தார்.