வெசாக் பூரணை தினத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் 18000 பொலிஸார் பாதுகாப்பு கடமையில் !


வெசாக் பூரணை தினத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் வெசாக் தோரணங்கள், தன்சல்கள் உள்ளிட்ட மத நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இதற்காக நாடு முழுவதும் விசேட பாதுகாப்பு நடவடிக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ்மா அதிபர் தேஷபந்து தென்னகோன் தெரிவித்துள்ளார். இதற்காக 18,000இற்கும் அதிகமான பொலிஸார் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் நாடு முழுவதும் 419 வெசாக் வலயங்களும் 321 விசாக தோரணங்களும் அமைக்கப்பட்டுள்ளன. பூரணை தினத்தை முன்னிட்டு இன்றும் நாளையும் 3,000இற்கும் அதிகமான தன்சல்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. அவற்றின் சுகாதாரத் தரம் தொடர்பில் முழுமையாக ஆய்வு செய்யப்படும் என பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்துள்ளார்.