பாலத்திலிருந்து தவறி விழுந்து ஒருவர் பலி !


இரத்தினபுரி, கிரியெல்ல பகுதியில் பாலத்தில் இருந்து தவறி விழுந்து ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

கிரியெல்ல பகுதியைச் சேர்ந்த 33 வயதுடைய பெண் ஒருவரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கிரியெல்ல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.