அத்துருகிரியவில் ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது


அத்துருகிரிய பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஒருவல பிரதேசத்தில் ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேக நபர் ஒருவர் நேற்று செவ்வாய்க்கிழமை (11) இரவு அத்துருகிரிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

அத்துருகிரிய பொலிஸாருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் அத்துருகிரிய - ஒருவல பிரதேசத்தைச் சேர்ந்த 36 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபரிடமிருந்து 12 கிராம் 200 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை அத்துருகிரிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.