வெப்பநிலை குறித்து கவனம் செலுத்துமாறு வேண்டுகோள் !



நாட்டின் பல பகுதிகளில் இன்று செவ்வாய்க்கிழமை (15) மனித உடலால் உணரப்படும் வெப்பநிலையானது கவனம் செலுத்த வேண்டிய மட்டத்தில் இருக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதன்படி, வடக்கு, வடமத்திய, வடமேல், மேல், தென், கிழக்கு மாகாணங்களிலும், இரத்தினபுரி மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் வெப்பநிலையானது கவனம் செலுத்தவேண்டிய மட்டத்தில் இருக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

எனவே, மனித உடலில் உணரப்படும் வெப்பநிலை 'எச்சரிக்கை நிலை' வரை அதிகரிக்க வாய்ப்புள்ளமை குறிப்பிடத்தக்கது.