இறுதிச் சடங்கு நிகழ்வில் தகராறு - கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொ லை




பதுளையில் மஹியங்கனை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட குருமட பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதுடன் இளைஞன் காயமடைந்துள்ளதாக மஹியங்கனை பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை (04) இரவு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கொலைசெய்யப்பட்டவர் சொரபொர பிரதேசத்தைச் சேர்ந்த 35 வயதுடையவரும் காயமடைந்தவர் மஹியங்கனை பிரதேசத்தைச் சேர்ந்த 20 வயதுடைய இளைஞனும் ஆவார்.

இறுதிச் சடங்கு நிகழ்வின் போது உறவினர்களுக்கு இடையில் ஏற்பட்ட தகராறு காரணமாக இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் 45 வயதுடைய சந்தேக நபரொருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மஹியங்கனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.