நாட்டில் மனநல பாதிப்பிற்குள்ளானவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு


நாட்டில் மனநல பாதிப்பிற்குள்ளானவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக பேராதனை மற்றும் களனி பல்கலைக்கழகங்களின் கூட்டு ஆய்வின் மூலும் தெரியவந்துள்ளது.

இதன்படி, மனநல பாதிப்பால் இளைஞர்களே அதிகம் பாதிப்படுவதாகவும் அதிலும் 10 முதல் 24 வயதுடைய 39 சதவீதமானோர் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

வைத்திய நிறுவனங்களில் 34 சதவீதமானோர் மனநல பாதிப்பு தொடர்பில் பயிற்சி பெற்ற வைத்திய அதிகாரிகளையும் , 38 சதவீதமானோர் மனநல பாதிப்பு தொடர்பில் பயிற்சி பெற்ற செவிலியர் அதிகாரிகளையும் கொண்டுள்ளது.

இந்நிலையில், இளைஞர்களின் மனநலம் தொடர்பிலான சேவைகளை அவசரமாக மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் இந்த அறிக்கை வலியுறுத்துகிறது.

குறிப்பாக 19 வயதுக்குட்பட்டவர்களில் 7 சதவீதமானோர் தற்கொலைக்கு முயற்சித்துள்ளதுடன், 35 சதவீதமானோர் வன்முறைகளில் ஈடுப்பட்டு வருவதாக தவல்கள் தெரிவிக்கின்றன.