புதுடெல்லியில் நடைபெற்ற 'இந்தியா டுடே கான்க்ளேவ் 2026' (India Today Conclave 2026) நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
ஈரானிய கப்பல் மூழ்கடிக்கப்பட்ட விவகாரம் மத்திய கிழக்கில் நிலவும் மோதல்களுக்கு மத்தியில், இலங்கையின் காலி மற்றும் கொழும்பு கடற்பரப்புக்கு அப்பால் ஈரானிய கடற்படைக்குச் சொந்தமான IRIS Dena என்ற கப்பல் அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பலால் தாக்கி மூழ்கடிக்கப்பட்டது.
இந்தத் தாக்குதலில் 80-க்கும் மேற்பட்ட ஈரானிய வீரர்கள் உயிரிழந்துள்ள நிலையில், உயிர் தப்பியவர்கள் காலி மற்றும் கொழும்பு வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்தியப் பெருங்கடல் பிராந்தியம் எப்போதும் சர்வதேச வர்த்தகத்திற்கான பாதுகாப்பான வலயமாகவே கருதப்பட்டது. ஆனால், ஒரு வெளிநாட்டு போர்க்கப்பல் மீது நடத்தப்பட்ட இந்தத் தாக்குதல் ஒரு ஆபத்தான முன்னுதாரணத்தை ஏற்படுத்தியுள்ளது. இது பிராந்திய பாதுகாப்பிற்குப் பெரும் அச்சுறுத்தலாகும்.
கடல்சார் பாதுகாப்பை உறுதிப்படுத்த இந்தியா, இலங்கை மற்றும் மாலைத்தீவு போன்ற நாடுகள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்றும் நாமல் ராஜபக்ஷ வலியுறுத்தியுள்ளார்.
குறிப்பாக, 'கொழும்பு பாதுகாப்பு மாநாடு' மூலம் ஒத்துழைப்பை வலுப்படுத்த வேண்டும் என்றும், இதில் இந்தியா ஒரு முக்கிய தலைமைத்துவப் பாத்திரத்தை வகிக்க முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
தமது கடற்பரப்புக்கு மிக அருகில் நடந்த இந்தச் சம்பவம் குறித்து இலங்கை அரசாங்கம் முறையான விளக்கத்தைக் கோர வேண்டும் என்று அவர் கூறினார்.
நமது கடல் எல்லையில் என்ன நடந்தது என்பதைத் தெரிந்துகொள்ளும் இறையாண்மை அதிகாரம் இலங்கைக்கு உள்ளது என்றும் அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.
எரிபொருள் இறக்குமதி மற்றும் தொழிலாளர் பணம் அனுப்புதல் பாதிக்கப்படலாம்.
இலங்கைத் தேயிலையின் முக்கிய வாங்குநராக ஈரான் இருப்பதால், வர்த்தக ரீதியான பாதிப்புகள் ஏற்படும். சுற்றுலாத்துறையிலும் இது தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும்.
ஈரானிய வீரர்களைத் திருப்பி அனுப்ப வேண்டாம் என அமெரிக்கா கோரிக்கை விடுத்துள்ளதாகக் கூறப்படும் செய்திகளுக்குப் பதிலளித்த அவர், இலங்கை தனது மனிதாபிமானக் கொள்கைகளின் அடிப்படையிலேயே தீர்மானங்களை எடுக்கும் என்றும், நடுநிலையான வெளிநாட்டுக் கொள்கையை இலங்கை பின்பற்றுவதாகவும் தெரிவித்தார்.
அத்துடன், கூடுதலாக, கச்சத்தீவு விவகாரத்தில் 1974 ஒப்பந்தத்தின்படி அது இலங்கைக்குச் சொந்தமானது என்றும், தமிழக மீனவர் பிரச்சினைக்குத் தீர்வு காணத் தமிழக அரசுடன் சிறந்த பேச்சுவார்த்தைகள் அவசியம் என்றும் அவர் வலியுறுத்தினார்.
இலங்கை தனது மண்ணில் வெளிநாட்டு இராணுவ முகாம்களை ஒருபோதும் அனுமதிக்காது என்றும், அனைத்து நாடுகளுடனும் சமநிலையான உறவையே பேணுவதாகவும் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.












.jpeg)
.webp)