
கல்முனை மாதவன் வீதியிலுள்ள வர்த்தகர் ஒருவரால் மறைத்து வைக்கப்பட்டிருந்த 22 பீப்பாய்களில் அடைக்கப்பட்ட 4,620 லீற்றர் டீசலை கல்முனை தலைமையகப் பொலிஸார் இன்று (06) கைப்பற்றியுள்ளனர்.
பொலிஸ் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்தச் சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கைப்பற்றப்பட்ட டீசல் கையிருப்பின் பெறுமதி 1,764,820 ரூபாய் என கல்முனை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதுடன், சந்தேகநபர் கல்முனை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.











