நாட்டின் பல பகுதிகளுக்கு கடும் மின்னல் எச்சரிக்கை


நாட்டின் பல பகுதிகளில் இன்று பலத்த மின்னல் மற்றும் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

அதன்படி, மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல், வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களுக்கும், திருகோணமலை, மன்னார், வவுனியா மற்றும் முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களுக்கும் இவ்வாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இன்று இரவு 11.00 மணி வரை செல்லுபடியாகும் வகையில், நாட்டின் 18 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கையும், 7 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளன.

இன்று பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் பல இடங்களில் பலத்த மின்னல் மற்றும் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். அத்துடன், இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதன்போது, மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைத்துக் கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். குறிப்பாக திறந்த வெளிகளிலும், மரங்களின் அடியிலும் இருப்பதைத் தவிர்க்குமாறும், மின் சாதனங்களைப் பயன்படுத்தும் போது அவதானமாக இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.