முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் குறிப்பிட்டதைப் போன்று, சுரேஷ் சலே மீது பொலிஸாரால் எந்தவிதமான தாக்குதல்களோ அல்லது மனிதநேயமற்ற நடத்தைகளோ மேற்கொள்ளப்படவில்லை என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுரேஷ் சலே தொடர்பாக சாதாரண சந்தேகநபர் ஒருவருக்குச் செயல்படுவதைப் போன்றே சட்ட நடைமுறைகள் பின்பற்றப்பட்டுள்ளதாகவும், அவருக்கு எந்தவொரு சிறப்புச் சலுகைகளோ அல்லது அலட்சியப் போக்குகளோ காட்டப்படவில்லை என்றும் பொலிஸார் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.













