
மஹர நகரில் அமைந்துள்ள மின்சார உபகரண விற்பனை நிலையம் ஒன்றில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
பரவி வரும் தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்காகவும், முற்றாக அணைப்பதற்காகவும் 4 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து அனுப்பப்பட்டுள்ளதாக தீயணைப்புப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
தீ விபத்துக்கான காரணம் மற்றும் சேத விபரங்கள் குறித்த துல்லியமான தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை. தீயணைப்புப் படையினருடன் இணைந்து அப்பகுதி மக்களும் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.










.jpg)

