சுகாதார அமைச்சகத்தின் யானைக்கால் நோய் தடுப்புப் பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் பிரசன்னா சேரசிங்க வெள்ளிக்கிழமை (06) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசும்போது, 'புருகியா மலாயி' (Brugia malayi) என்று பெயரிடப்பட்ட இந்த ஒட்டுண்ணி மூலம் கடந்த 5 மாதங்களில் 7 பேர் யானைக்கால் நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
மேலும், இதனை முறையாகக் கட்டுப்படுத்தாவிட்டால், இந்த ஒட்டுண்ணித் தொற்று நாடு முழுவதும் பரவக்கூடிய அபாயம் உள்ளதாகவும் அவர் எச்சரித்துள்ளார்.













