
தீர்க்கப்படாமல் நீடித்து வரும் சிறுவர் துஷ்பிரயோக முறைப்பாடுகளுக்கு விரைவாக நீதியைப் பெற்றுக் கொடுப்பதை நோக்கமாகக் கொண்டு திரட்டப்பட்ட 40,000 கையெழுத்துக்கள் அடங்கிய மகஜர், பாராளுன்றத்தில் வைத்து எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவிடம் இன்று (9) உத்தியோகபூர்வமாகக் கையளிக்கப்பட்டது.
40 000 குழுவின் பிரதிநிதியான துஷ் விக்ரமநாயக்க உள்ளிட்ட குழுவினரால் இந்த மனு எதிர்க்கட்சித் தலைவரிடம் சமர்ப்பிக்கப்பட்டது.
இதன்போது, ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்களான ரோஹிணி கவிரத்ன, சமிந்தரானி கிரியெல்ல உள்ளிட்ட ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய மக்கள் கூட்டணியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலரும் இந்த மனுவில் கையெழுத்திட்டுத் தங்களது ஆதரவை வெளிப்படுத்தினர்.






.jpg)


.jpg)



