கிழக்கு உட்பட பல பல மாவட்டங்களில் இன்று கடும் வெப்பம் !


வெப்பச் சுட்டெண்ணின் தாக்கம் காரணமாக இன்று (26) பகல் வேளையில் கிழக்கு மாகாணம் உள்ளிட்ட யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, பொலன்னறுவை, ஹம்பாந்தோட்டை மற்றும் மொனராகலை மாவட்டங்களில் மனித உடலால் உணரப்படும் வெப்பநிலை அதிகரிக்கக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதேவேளை, சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும், கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும். நாட்டின் ஏனைய பகுதிகளில் பெரும்பாலும் வறட்சியான வானிலை நிலவும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.

மேலும், சில பகுதிகளில் மணித்தியாலத்திற்கு 40 முதல் 50 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்றும், ஹம்பாந்தோட்டை முதல் பொத்துவில் வரையிலான கடற்பரப்பில் காற்றின் வேகம் 60 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக்கூடும் என்பதால், மீனவர்கள் மற்றும் கடல்சார் பயணிகள் அவதானத்துடன் செயற்படுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.