400 சட்டவிரோத மருந்து மாத்திரைகளுடன் 25 வயது இளைஞர் கைது!




அநுராதபுரம், மாத்தளை சந்திப் பகுதியில் கடற்படையினரும் பொலிஸாரும் இணைந்து மேற்கொண்ட சோதனையில், சட்டவிரோதமாக விற்பனை செய்வதற்காக வைத்திருந்ததாகக் கூறப்படும் 400 மருந்து மாத்திரைகளுடன் 25 வயதுடைய இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர் அநுராதபுரத்தைச் சேர்ந்தவர் என்பதுடன், சந்தேகநபரும் கைப்பற்றப்பட்ட மருந்து மாத்திரைகளும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக அநுராதபுரம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.