இதற்கமைய, 2027 ஆம் ஆண்டுக்கானத் துப்பாக்கி அனுமதிப்பத்திரம் வைத்துள்ள நபர்கள் மற்றும் நிறுவனங்கள் தமது அனுமதிப்பத்திரங்களைப் புதுப்பிக்கும் நடவடிக்கை நாளை செவ்வாய்க்கிழமை (01) முதல் ஆரம்பமாகவுள்ளது.
துப்பாக்கி அனுமதிப்பத்திரம் வைத்துள்ள அனைத்து நபர்களும் நிறுவனங்களும் 2026 டிசம்பர் 31ஆம் திகதிக்கு முன்னர் தமது துப்பாக்கி அனுமதிப்பத்திரங்களைப் புதுப்பித்துக் கொள்ள வேண்டும்.
2026 டிசம்பர் 31ஆம் திகதிக்கு முன்னர் அனுமதிப்பத்திரங்களைப் புதுப்பிக்கத் தவறினால், துப்பாக்கிகள் கட்டளைச் சட்டத்தின் 22வது பிரிவின் விதிகளுக்கு அமைவாகச் செல்லுபடியாகும் அனுமதிப்பத்திரம் இன்றித் துப்பாக்கியை வைத்திருப்பது தண்டனைக்குரிய குற்றமாகும் என அந்த அறிவித்தலில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதேவேளை, 2026.09.01 முதல் 2026.12.31 வரை இடைப்பட்ட காலப்பகுதியில் பதிவுகளைப் புதுப்பிக்கத் தவறுகின்ற தனியார் பாதுகாப்பு முகவர் நிலையங்களுக்குத் தாமதக் கட்டணம் விதிக்கப்படும் அல்லது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, ஏற்படக்கூடிய அசௌகரியங்களைத் தவிர்ப்பதற்காகக் குறிப்பிட்ட காலக்கெடுவுக்கு முன்னர் உரிய புதுப்பித்தல்களை மேற்கொள்ளுமாறு பொதுமக்களிடமும் சம்பந்தப்பட்ட நிறுவனங்களிடமும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.


.jpg)

.jpg)
.jpg)






.jpg)
