இலங்கை விமானப் போக்குவரத்து வரலாற்றில் புதிய சாதனை: முதல் பெண் பாதுகாப்பு மார்ஷலாக வசந்தி முருகேசு


இலங்கை சிவில் விமானப் போக்குவரத்துப் பாதுகாப்புத் துறையின் வரலாற்றில் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க மைல்கல்லாக, வசந்தி முருகேசு 'விமானநிலையம் மற்றும் விமானச் சேவைகள் தனியார் நிறுவனத்தின்' முதல் பெண் பாதுகாப்பு மார்ஷலாக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதுவரை ஆண்கள் மாத்திரமே நியமிக்கப்பட்ட நிலையில் விமானநிலையப் பாதுகாப்பு மற்றும் மார்ஷல் துறையில், முதன்முறையாக ஒரு பெண் இந்தப் பொறுப்பை ஏற்றுப் புதிய சாதனை படைத்துள்ளார்.

சிவில் விமானப் போக்குவரத்துத் துறையில் பெண்களின் பங்களிப்பை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றுள்ள இச்சாதனை, எதிர்கால இளம் பெண்களுக்குப் பெரும் ஊக்கமாகவும் முன்மாதிரியாகவும் அமையும் எனக் கருதப்படுகிறது.