இந்த தாக்குதலின் முக்கிய அம்சம், பயனர் எந்தச் செயலையும் செய்யாமல் இருந்தபோதும் தாக்குதலாளர்கள் வட்ஸ்அப் கணக்கிற்குள் நுழைய முடிவதாகும் என்றும் அந்த அணி குறிப்பிட்டுள்ளது.
இலங்கை கணனி அவசர தயார் நிலை அணி வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,
புதியதாக அடையாளம் காணப்பட்ட சீரோ -கிளிக் வட்ஸ்அப் கணக்கு கைப்பற்றும் தாக்குதல், பாதுகாப்பு குறைபாடுகள் உள்ள ஐஓஎஸ் 16 பதிப்புகளில் இயங்கும் ஐபோன் சாதனங்களை இலக்காகக் கொண்டுள்ளது. இந்த தாக்குதலின் முக்கிய அம்சம், பயனர் எந்தச் செயலையும் செய்யாமல் இருந்தபோதும் தாக்குதலாளர்கள் வட்ஸ்அப் கணக்கிற்குள் நுழைய முடிவதாகும்.
இந்த தாக்குதல் தொடர்பாக ஊடகத்துறையினர், வணிக சமூக உறுப்பினர்கள் உட்பட பலர் இலங்கை கணனி அவசர தயார் நிலை அணிக்கு முறைப்பாடு அளித்துள்ளனர். இதன் மூலம் இந்த சீரோ -கிளிக் வட்ஸ்அப் பாதுகாப்பு மீறல் இலங்கையிலும் இடம்பெற்று வருவதாகக் காணப்படுகிறது.
இத்தாலிய பாதுகாப்பு ஆய்வு நிறுவனமொன்றின் Forensic விசாரணையின் படி, வட்ஸ்அப்பின் Linked Device Synchronization செயல்முறையை பாதிக்கும் பல பாதுகாப்பு குறைபாடுகளை இணைத்து பயன்படுத்தி தாக்குதலாளர்கள் இந்த நடவடிக்கையை மேற்கொண்டு இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்ததாவது, தங்களது வட்ஸ்அப் கணக்குகளில் இருந்து பணம் மாற்றுமாறு கோரும் அனுமதியற்ற செய்திகள் அனுப்பப்பட்டிருந்தன. ஆனால், கணக்கின் Linked Devices அமைப்புகளில் எந்தச் சந்தேகத்திற்கிடமான சாதனமும் காணப்படவில்லை. மேலும், சில சந்தர்ப்பங்களில் தாக்குதலாளர்கள் பாதிக்கப்பட்டவர்களின் வட்ஸ் அப் குழுக்களின் நிர்வாக உரிமைகளையும் கைப்பற்றியிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தாக்குதல் ஐஓஎஸ் 16.7.12 க்கும் குறைந்த பதிப்புகளில் இயங்கும் சாதனங்களை பாதிக்கக்கூடும் என்று நம்பப்படுகிறது. இது பாரம்பரிய QR-code phishing தாக்குதல்களை விட மிகவும் சிக்கலானதும் மேம்பட்டதுமான தாக்குதல் முறையாக கருதப்படுகிறது.
ஐஓஎஸ்ஸை உடனடியாக சமீபத்திய பதிப்பிற்கு புதுப்பிக்கவும், வட்ஸ்அப்பின் அண்மைய பதிப்பை நிறுவவும், Two-Step Verification வசதியை செயல்படுத்தவும், Chat Lock வசதியை பயன்படுத்தவும்,
அசாதாரணமான பணக் கோரிக்கைகள் வந்தால், நம்பகமான வேறு தொடர்பு வழி மூலம் உறுதிப்படுத்தவும்
பாதுகாப்பு நிபுணர்கள் எச்சரிப்பதாவது, இந்த சம்பவம் நிதி மோசடிகளை மேற்கொள்ளும் சைபர் குற்றவாளிகள் எந்தவொரு கிளிக் நடவடிக்கையும் இன்றிச் செய்யப்படும் ஊடுருவல் நுட்பங்களை அதிகளவில் பயன்படுத்தி வருவதை வெளிப்படுத்துகிறது. எனவே, மொபைல் சாதனங்களையும் பயன்பாடுகளையும் எப்போதும் முழுமையாக புதுப்பித்த நிலையில் வைத்திருப்பது மிகவும் முக்கியமானதாகும்.





.jpg)






.jpg)
