மஞ்சந்தொடுவாய் மஜீத் வீதியிலுள்ள வீடொன்றில் தூங்கிக்கொண்டிருந்த 49 வயதுடைய திருமணமாகாத ஆண் ஒருவரின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.
குறித்த இடத்திற்கு விஜயம் செய்த பதில் திடீர் மரண விசாரணை அதிகாரி வீ.ஆர்.மகேந்திரன் விசாரணைகளை மேற்கொண்டு சடலத்தை பிரேத பரிசோதனைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்தார்.
குறித்த சடலத்தின் அருகே தூக்கு கயிறு காணப்பட்டதுடன், சடலத்தின் கழுத்தில் குறித்த கயிற்றின் ஒரு பகுதி காணப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பில் காத்தான்குடி பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.




.jpg)






.jpg)

