இளைஞர்களின் கனவுகள் நனவாகும் புதிய இலங்கையை உருவாக்குவோம் – திலித் ஜயவீர



இலங்கை இளைஞர்களுக்கு எவ்வித வருத்தமும் ஏற்படாத பிரகாசமான எதிர்காலத்தை உருவாக்குவதற்கான நிலையான திட்டம் சர்வஜன அதிகாரத்தில் உள்ளதாக அதன் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான திலித் ஜயவீர தெரிவித்துள்ளார்.

"சர்வஜன Youth Vibe 26" நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.

"இன்று நாங்கள் உங்களிடம் பேசுவது மற்றொரு அரசியல் கூட்டத்தில் அல்ல. அன்பையும் பாசத்தையும் சுமந்து வந்து, வரலாற்றில் இந்த நாட்டின் அரசியலில் இளைஞர்களுக்கு ஏதேனும் ஒரு இடத்தில் அநீதி இழைக்கப்பட்டிருந்தால், அது திருத்தப்பட வேண்டும் என்று பலமாக நம்பும் ஒரு குழுவாகவே உங்களிடம் பேசுகிறோம். சர்வஜன இளைஞர் முன்னணி நம்பும் சித்தாந்தம் இதுவே.

இன்று ஒரே ஒரு கருத்தின் அடிப்படையில் நின்று உங்களிடம் பேசுகிறோம். அது என்னவென்றால், எங்கள் இந்த அரசியல் இயக்கத்தில், இந்த சர்வஜன அதிகாரத்தில், நாட்டின் இளைஞர்கள் எந்தவொரு நாளிலும், எந்தவொரு கணத்திலும் கவலையோ, வருத்தமோ அல்லது மனவேதனையோ அடையும் வகையில் எதுவும் நடக்காது என்பதுதான்.

அதேபோல், வரலாற்றில் அரசியல்வாதிகள் பொறுப்பின்றி கூறிய வார்த்தைகளை நம்பி நீங்கள் ஏமாற்றமடைந்திருந்தால், மீண்டும் அவ்வாறு ஏமாறுவதற்கு நாங்கள் இடமளிக்க மாட்டோம். இதுவே நமது செய்தி. நாங்கள் ஒரு நேர்மையான இயக்கம். இந்நாட்டு இளைஞர்களின் உண்மையான இயக்கம்.

வரும் 2029 தேர்தலில் குருணாகல் மாவட்டத்தில் மட்டும் 1,50,000 இளைஞர்கள் முதன்முறையாக வாக்களிக்கவுள்ளனர் என்பதை நாங்கள் அறிவோம். இந்த 1,50,000 இளைஞர்கள் மட்டுமே தீர்மானித்து, இந்நாட்டின் எதிர்காலம் நமது வாக்கின் மூலம் மட்டுமே தீர்மானிக்கப்பட வேண்டும் என்றும், பணப்புழக்கம் உள்ள, கனவுகளை நனவாக்கக்கூடிய, சொந்தமாக வீடு, வாகனம் வாங்கக்கூடிய, சொந்தப் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பக்கூடிய, உலகளவில் வளர்ந்த நாடுகளில் வாழும் இலங்கையராக வாழ விரும்புவதாகவும் கருதிச் செயல்பட்டால், இந்நாட்டின் எதிர்காலம் ஒரே இரவில் மாறிவிடும்.

அதன்பிறகு நீங்கள் வாழப்போவது நமது சாமர கூறியது போல் உண்மையாகவே மகிழ்ச்சியான ஒரு தேசத்தில்தான். அந்த மகிழ்ச்சியான தேசத்தையே நாம் உருவாக்க வேண்டும். அன்பான பிள்ளைகளே, நாட்டின் இளைஞர்களான உங்கள் மீது எங்களுக்குப் பெரிய நம்பிக்கை உள்ளது. நாம் பேசும் இந்த தொழில்முனைவு அரசு என்ற கருத்தாக்கத்தை நாட்டின் ஒவ்வொரு சிறிய குழந்தையின் மனதிலும் பதிய வைக்க நினைப்பது அதனால்தான்.

எதிர்மறை எண்ணங்களிலிருந்து விலகி எப்போதும் நேர்மறையாக சிந்திக்குமாறு உங்களுக்கு அழைப்பு விடுப்பதும் அதற்காகவே. எந்த அரசியல்வாதி உங்கள் மனதில் என்ன குப்பைகளைப் போட்டாலும், உங்கள் மனதையும் மூளையையும் நேர்மறை சிந்தனையால் நிரப்பவே நாங்கள் விரும்புகிறோம். உலகிலுள்ள எந்தவொரு நாட்டையுடனும் போட்டியிடும் ஆற்றலும், அறிவும், நம்பிக்கையும் இந்நாட்டு இளைஞர்களுக்கு உள்ளது என்பதே எமது செய்தியாகும்.

இந்தச் செய்தியை நாம் ஏன் கொண்டு செல்ல வேண்டும்? நாளை காலை நீங்கள் விடியும்போது இந்நாட்டின் மீதும், எங்கள் மீதும், உங்கள் மீதும் நம்பிக்கை வைத்து, விரைவில் ஒன்றிணைந்து எழுவோம் என்ற உணர்வோடு எழ வேண்டும். மாறாக, அழுது புலம்பிக்கொண்டு, எதிர்மறையாக, இயலாமையுடன் செயல்படும் நாட்டின் இளைஞர்களாக அல்ல. அந்த ஒரு செய்தியை மட்டுமே நான் உங்களுக்கு வழங்குகிறேன்.

https://youtu.be/ETCCmXPDHk8?si=CTCHGhxdh6AdvhR8அதிக நேரம் எடுக்க மாட்டேன். ஏனெனில், இந்த எளிய செய்தியை மட்டும் உங்கள் மனதில் இருத்தி, உங்கள் தோளோடு தோள் நிற்கு ஏனைய இளைஞர்களுடனும் பகிர்ந்துகொண்டால், நீங்கள் விரும்பும், உங்கள் கனவுகள் நனவாகும் புதிய வளர்ந்த இலங்கையை நம்மால் உருவாக்க முடியும். எனவே அந்த நம்பிக்கையுடன் இன்று குருணாகலில் நடைபெற்ற இந்த மிக வெற்றிகரமான Youth Vibe இளைஞர் மாநாட்டை, நமது GenZ மற்றும் Gen Alpha மாநாட்டை நீங்கள் நினைவில் வைத்திருக்க வேண்டும்."

இளைஞர்களின் புதிய பரிமாணங்களைத் தேடிச் செல்லும் "சர்வஜன Youth Vibe 26" நிகழ்ச்சி, குருணாகல் மாநகர சபை விளையாட்டு மைதானத்தின் ‘அம்ஃபிதியேட்டர்’ வளாகத்தில் பெருந்திரளான இளைஞர், யுவதிகளின் பங்கேற்புடன் இன்று (15) நடைபெற்றது.

"மாற்றத்திற்காக மாறுவோம்" என்ற கருப்பொருளில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் பெருந்திரளான இளைஞர், யுவதிகள் கலந்துகொண்டனர்.