சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுப்பதற்கான நடவடிக்கைகள் அப்போது ஆரம்பிக்கப்பட்டிருந்ததாகவும், எனினும் அன்றைய அரசாங்கத்திற்குள் இருந்த சிலரின் தலையீட்டால் அவை தொடர்ந்து முன்னெடுக்கப்படவில்லை என்றும் அவர் குற்றஞ்சாட்டினார்.
முந்தைய அரசாங்கங்களின் காலத்தில் ஊழல் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டவர்களே தற்போது அரசாங்கத்தை விமர்சிப்பவர்களாக உள்ளனர் எனவும் அவர் கூறினார்.
தற்போதைய எதிர்க்கட்சியின் சில தரப்புகள் அரசாங்கத்திற்கு எதிரான போராட்டங்களை முன்னெடுப்பதற்கான நம்பகத்தன்மையைக் கொண்டுள்ளனவா என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
ராஜபக்ஷ குடும்ப உறுப்பினர்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுப்பதை அரசியல் பழிவாங்கலாகக் கருதக்கூடாது எனத் தெரிவித்த அஷு மாரசிங்க, போதுமான ஆதாரங்கள் காணப்படும் சந்தர்ப்பங்களில் உரிய சட்ட நடைமுறைகளை முன்னெடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.




.jpg)





.webp)


