க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் இந்த ஆண்டுக்குள் வெளியாகும் !



2026ஆம் ஆண்டுக்கான கல்விப் பொது தராதர உயர்தரப் பரீட்சை கடந்த ஆகஸ்ட் மாதம் 10 ஆம் திகதி ஆரம்பமான நிலையில் செப்டெம்பர் 05 ஆம் திகதியுடன் நிறைவடைந்தது.

இப்பரீட்சைக்கு இம்முறை மொத்தமாக 3 ,72, 310 பரீட்சாத்திகள் தோற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

உயர்தரப் பரீட்சையின் விடைத்தாள் மதீப்பீடு சனிக்கிழமை (05) முதல் ஆரம்பமாகியுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் திருமதி இந்திகா குமாரி லியனகே தெரிவித்தார்.

அத்துடன், உயர்தர பரீட்சைக்கான செய்முறை பரீட்சைகள் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 24 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதாக தெரிவித்தார்.

மேலும் பரீட்சை பெறுபேறுகளை இவ்வாண்டின் இறுதிக்குள் வெளியிடுவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது என்றார்.