கல்லடிப் பாலத்தின் அருகில் ஆணின் சடலம் மீட்பு

(சிவம்)  (பகிரதன் , துஷாந்தன் )

மட்டக்களப்பு கல்லடிப் பாலத்தின் அருகில் ஆணொருவரின் சடலம் இன்று திங்கட்கிழமை (01) மீட்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பொலிசார் தெரிவித்தனர்.

மட்டக்களப்பு பிள்ளையாரடியைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான கந்தராசா மிபீந்தன் வயது (39) என்பவரின் சடலமே மீட்கப்பட்டுள்ளதாகவும் கூறினர்.

நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தனது மகளான கோபிகாவின் (12) மஞ்சள் நீராட்டு விழாவிற்கு தனது உறவினர்கள் வருகை தராததினால் மனமுடைந்த நிலையில் நேற்றிரவு 10.00 மணிமுதல் காணாமல் போயுள்ளதாக பொலிசில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் மேலும் தெரிவித்தனர்.

இதே வேளை சடலத்தை பார்வையிட வந்த மனைவி மயங்கிய நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மட்டக்களப்பு பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.