தாண்டவன்வெளி பியூட்ச மயின்ட் கின்டர் காடன் சிறுவர் பராமரிப்பு நிலையத்தின் சிறுவர் தின ஊர்வலம்


(சிவம்)

சர்வதேச சிறுவர் மற்றும் முதியோர் தினத்தை முன்னிட்டு தாண்டவன்வெளி பியூட்ச மயின்ட் கின்டர் காடன் சிறுவர் பராமரிப்பு நிலையத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட சிறுவர் தின ஊர்வலம் நகரில் இன்று (01) நடைபெற்றது.

குறித்த நிலையத்தின் பணிப்பாளர் எஸ். மனோகரன் தலைமையில் நடைபெற்ற ஊர்வலம் திருமலை வீதி வழியாக ஏழைகளின் சிறிய கன்னியர்களால் பராமரிக்கப்படும் தாண்டவன்வெளி புனித ஜோசப் வயோதிபர் இல்லம் வரை சென்றது.

இல்லத்தில் உள்ள வயோதிபர்கள் மற்றும் பியூட்ச மயின்ட் கின்டர் காடன் சிறுவர்களின் ஓன்றுகூடல் நிகழ்வில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு வண்ணத்துப் பூச்சிகள் சிறுவர் சமாதானப் பூங்காவின் பணிப்பாளரும் மனோதத்துவ ஆராய்ச்சி வல்லுனருமான யேசுசபைத் துறவி அருட்தந்தை போல் சற்குணநாயகம் கலந்து கொண்டார்.

ஏழைகளின் சிறிய கன்னியர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வுகள் வயோதிபர் இல்ல ஒன்றுகூடல் மண்டபத்தில் நடைபெற்றது.

முதலில் வயோதிபர்களின் பேண் வாத்திய இசை, சிறுவர்கள் மற்றும் வயோதிபர்களின் கலை கலாசார நிகழ்வுகள் நடைபெற்றதோடு சிறுவர்கள் வயோதிபர்களுக்கு பரிசில்களை வழங்கிக் கௌரவித்ததோடு வயோதிபர்களும் சிறுவர்களுக்கு பரிசில்களை வழங்கி மகிழச்சிப்படுத்தியமை குறிப்பிடத்தக்கது.